Tuesday, June 11, 2013

கடற்கரைக்கு வழி

அறைச் சுவர் நெரிக்கப்
பிதுங்கும் அவனுக்கு –
’பாவம் பாவம்’ என
வழிவிடும் வாசல்.
இரு கரையும் நின்று
மறிக்கும் கட்டடங்கள்
’கைதி’யென அவனை
மிரட்டி ’நட!’த்தும்.
அங்கங்கே
’தப்பி’என பல
சந்துகள் இரங்கும்.
கண்டு நுழைந்தால்
அங்கும் இருகரை
அதே போல் அவனை!
இப்படி
’நட!’ந்து! ’நட!’ந்து ’நட!’ந்து
கடற்கரை வந்து அமர்வான்
சுகமாய்
கடலின்மீது மனத்தை விரித்துவிட்டு
அடிவானைக் குறிவைக்க

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP