Monday, April 29, 2013

முத்துச் சிப்பிகள்

அமைதிக் கடலிலாழ்ந்து
அமுது பருகி நிற்கும் விழிகளோ?

கண்மணிகள் பொத்திக்
காக்கும் பேரிமைகளோ?

அய்யமும் துயரமுமாய் சிறக்கணித்து
ஆயும் அரைமலர் மொக்குகளோ?

வியப்பால் விரிந்தலர்ந்த
வாய்த் திறப்போ?
அத் திறப்பு வழி புகுந்து
உட் தாழிட்டுக் கொண்ட மெய்மையோ?

தான் கண்டுபிடித்ததன்
பேழையேயாகிக்கொண்ட இதயமோ?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP