Wednesday, February 13, 2013

ஒரு தூயவெளி

ஊருக்கு வெளியே ஒரு தூயவெளி
ஆங்காங்கே முளைத்திருக்கும் காலனிகள்
மாலைக் கதிரொளிப் போர்வை விரித்திருக்கும்
ஆளரவமற்ற சாலை நீட்டம்
தன்னந்தனியாய்ப் புறப்பட்டதொரு மாலை நடை

திடீரெனச் சூழ்ந்த ஓர் அழகில்
திகைத்து நான் நின்ற போதில்
புன்னகைத்து வரவேற்று அழைத்தது ஒரு தீண்டல்
எங்கே யார் ஏன் எதற்கு எனக்
குதிக்கும் மூளையும் மவுனமாயிருந்தது அப்போது

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP