Sunday, December 2, 2012

இந்த வியாதிகளும் நாற்றமுமே நம் விதியா?

ஊறும் தென்னீரின் வெள்ளமெங்கே?
காதற் படகுகளும் மலர்களும் தென்றலும்
பறவைகளும் வெள்ளிமீன்களும் உலாவும்
அந்த நீர்நிலைகள் எங்கே?

நம் ஊற்றுக்கண்களைப் பொத்தி
அடைத்துக்கொண்டுள்ளது-
ஊறும் தென்னீரால்
அழிக்க இயலாத அளவுக்குத்
தேங்கிய நீர் விகாரக்கிடையின் பாரம்!

ஒட்ட இறைத்து
ஊறும் நீர் காண்பதற்கும்
காப்பதற்கும்
யார் சொல்லித் தரவேண்டும்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP