Saturday, November 12, 2011

குழந்தைகள் என்றால்...

குழந்தைகளென்றால் கடவுளுக்கு ரொம்பப் பிடிக்குமாம்
குழந்தைக்கு அதைப் பற்றி என்ன?
கடவுள் எப்போதும் குழந்தைகளோடு இருக்கிறாராம்
குழந்தைக்கு அதைப் பற்றி என்ன?
அண்டத்திலேயே பெரிய சிம்மாசனம் கடவுளுடையதுதானாம்
குழந்தைக்கு அதைப் பற்றி என்ன?
கடவுள் அதிலேவந்து குந்தியிருகாதப்போ
குழந்தைகள் அதிலே ஏறி உட்கார்ந்து நடிக்குமாம்
கடவுளுக்கு அதைப் பற்றி என்ன?
சமயங்களில் குழந்தைகள் அதிலே சிறுநீரும் பெய்துவிடுமாம்
கடவுளுக்கு அதைப் பற்றி என்ன?

Read more...

எந் நோய் செய்தது?

மாவீரன் போல் பேரரசன் போல்
தலையையும் தண்டு எலும்பையும்
காக்கும் தலைப்பாகை அணிந்து
எதிர்கொண்ட காலமெல்லாம் எங்கே?

எந் நோய் செய்தது,
வெயில் கொல்லும் என்பிலதன் போலும்
இப் பலகீனம்?

Read more...

வெளிவாயில்...

வெளிவாயிற்
தாழ்ப்பாள் திறக்கும் ஒலியும்
என் இருப்பினை உறுதிப்படுத்த
வினவும் ஒரு குரலும்
என் மனைவி
மேலே என சுட்டும் சைகையும்
மாடிப்படிகளில் ஒலித்துவரும்
காலடிகளும்
வேதனைமிக்கதொரு செய்தியினைத்தான்
இன்று கொண்டுவருமோ?

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP