Saturday, May 7, 2011

கட்டுச் சோறு

எவ்விதம் நான் மனச்சிக்கல்
மிக்கவோர் மனிதனாய் மாறிப்போனேன்?
எவ்விதம் என் மனச்சிக்கல் சேற்றினுள்
பூக்கின்றன தாமரைகள்?

அப்பொழுதையும் அவ்விடத்தையும்
அவர்கள் விட்டேற்றியாய் எதிர்கொண்டதைக் கண்டு
வியப்பும்
நான் தூக்கிக் கொண்டுவந்த சுமையை எண்ணிக்
கூச்சமுமாய்
சஞ்சலத்தில் ஆழ்கிறேன் சகபயணிகள் மத்தியில்
என் கட்டுச்சோற்றை நான் பிரிக்கும்போதெல்லாம்

ஆனால் கட்டுச்சோற்றின் ருசி அலாதி, மேலும்
அதன் சௌகரியமும் நிச்சயத்தன்மையும்
விரும்பத்தகாததா? எல்லாவற்றிற்கும் மேல்
இது ஒன்றும் போதை தரும்
நினைவுகளோ கனவுகளோ அல்லவே.
தூராதி தூரமும் காலமும் கடந்து நீளும்
அன்பின் மெய்மை அன்றோ இது!

அற்புதம்! என அமர்ந்தார்கள்
அவர்கள் என்னோடு.
அங்கங்கு கிடைத்தனவும் என் கட்டுச்சோறும்
கலந்தன உற்சாகத்தோடு

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP